ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சார்பில் “ஆலிம்களின் எழுச்சியே சமுதாயத்தின் வலிமை” என்ற மையக் கருத்தில் மாநில அளவிலான உலமாமக்கள் மாநாடு, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இம்மாநாட்டை
மௌலவி கபீர் உமரி
திருக்குர்ஆன் வசனங்களை ஓதி
துவக்கி வைத்தார்.
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்
மாநிலத் தலைவர் மௌலவி முஹம்மது ஹனீபா மன்பயீ தலைமையுரையாற்றி, மாநாட்டின் நோக்கம், சமுதாயம் எழுச்சி பெற ஆலிம்களின் பங்களிப்பு முக்கியத்துவம் குறித்தும், ஜமாஅத்தே இஸ்லாமிய ஹிந்தின் நிலைப்பாடுகள் குறித்தும் விரிவாக பேசினார். முன்னதாக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் உலமா பிரிவு மாநில செயலாளர் மௌலவி அஹ்மத் முஹ்யித்தீன் ஃபைஜி வரவேற்புரையாற்றினார்.
தொடர்ந்து “முன்மாதிரி மஸ்ஜித் – முன்மாதிரி மஹல்லா” என்ற தலைப்பில் திருநெல்வேலி தாருஸ்ஸலாஹ் உயர் கல்வியகம் முதல்வர் மௌலவி ஷேக் அப்துல் காதிர் காஷிஃபியும், “வளமான இந்தியாவிற்கு ஆலிம்களின் பங்கு” என்ற தலைப்பில் மௌலவி காஞ்சி அப்துர் ரவூஃப் பாகவியும், “இந்திய அரசியலமைப்பு சட்டமும், மதினா சாசனமும்” என்ற தலைப்பில் ஹிதாயா இஸ்லாமிய கல்லூரி தாளாளர் மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதியும், “ஒழுக்க வீழ்ச்சியிலிருந்து சமுதாயத்தை மீட்டெடுப்பதில் ஆலிம்களின் பங்கு” என்ற தலைப்பில் பைஜுல் அன்வர் அரபிக் கல்லூரி செயலாளர் மௌலவி ஹாபிழ் பாஜில் செய்யது இப்ராஹிமும் சிறப்புரையாற்றினர்.
இறுதியாக “உலமாக்களின் எழுச்சியே
சமுதாயத்தின் வலிமை”
என்ற தலைப்பில் அஸ்ஸலாம் இஸ்லாமியக் கல்லூரியின் பேராசிரியர் மௌலவி நூஹ் மஹ்ழரி உரையாற்றினார். மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.
மேலும் மாநாட்டை ஒட்டி நடைபெற்ற கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு உலமாக்கள் பரிசுகள் வழங்கி கௌரவித்தார்கள். இம்மாநாட்டில் 500 க்கும் மேற்பட்ட
உலமாக்கள் கலந்து கொண்டனர். மாநாட்டு அமைப்பாளர்
மௌலவி நாசர் புகாரி
மிகச் சிறப்பாக வழி நடத்தினார். மாநாட்டின் இறுதியாக மௌலவி அப்துல் ஹஸீப் பாகவி ஃபாஜில் தேவ்பந்த் நன்றியுரை வழங்கினார்.
Comments are closed.