தகைசால் தமிழர் விருது பேராசிரயர் காதர் மொகிதீனுக்கு சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்
தகைசால் தமிழர் விருது பேராசிரயர் காதர் மொகிதீனுக்கு சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்
சென்னை தலைமைச் செயலக கோட்டை முகப்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், 2025 ஆம் ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருதுடன், ரூ.10 லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
மேலும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு அப்துல் கலாம்,
கல்பனா சாவ்லா விருதுகளையும், வழங்கினார்.

இஸ்ரோ தலைவர் நாராயணனுக்கு டாக்டர் ஏபிஜே.அப்துல் கலாம் விருதும், துளசிமதி முருகேசனுக்கு துணிவு, சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருதும் வழங்கப்பட்டன.
விருதுடன் தலா ரூ.5 லட்சம் பரிசுத் தொகை, பதக்கமும் வழங்கப்பட்டது.
பின்னர், பல்வேறு பிரிவுகளில் நல்ஆளுமை விருதுகள் வழங்கப்பட்டன. சமுதாய பங்கேற்பு மூலம் மாற்றத்தை கொண்டுவரும் ஊரக மேம்பாட்டு முயற்சிகள் பிரிவில் உதவி காவல் கண்காணிப்பாளர் வி.பிரசன்ன குமார், வட்டாட்சியர் ப.பாலகிருஷ்ணன்,
வட்டார வளர்ச்சி அலுவலர் வீ.யமுனா விருது பெற்றனர்.


Comments are closed.