தகைசால் தமிழர் விருது பேராசிரயர் காதர் மொகிதீனுக்கு சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

தகைசால் தமிழர் விருது பேராசிரயர் காதர் மொகிதீனுக்கு சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

 

 

சென்னை தலைமைச் செயலக கோட்டை முகப்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், 2025 ஆம் ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருதுடன், ரூ.10 லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

மேலும் பல்​வேறு துறை​களில் சாதனை புரிந்​தவர்​களுக்கு அப்​துல் கலாம்,

கல்​பனா சாவ்லா விருதுகளை​யும், வழங்​கி​னார்.

 

 

Bismi

இஸ்ரோ தலை​வர் நாராயணனுக்கு டாக்​டர் ஏபிஜே.அப்​துல் கலாம் விருதும், துளசிமதி முரு​கேசனுக்கு துணிவு, சாகச செயலுக்​கான கல்​பனா சாவ்லா விருதும் வழங்​கப்​பட்​டன.

விருதுடன் தலா ரூ.5 லட்​சம் பரிசுத்​ தொகை, பதக்​க​மும் வழங்​கப்​பட்​டது.

பின்​னர், பல்​வேறு பிரிவு​களில் நல்​ஆளுமை விருதுகள் வழங்​கப்​பட்​டன. சமு​தாய பங்​கேற்பு மூலம் மாற்​றத்தை கொண்​டு​வரும் ஊரக மேம்​பாட்டு முயற்​சிகள் பிரி​வில் உதவி காவல் கண்​காணிப்​பாளர் வி.பிரசன்ன குமார், வட்​டாட்​சி​யர் ப.பால​கிருஷ்ணன்,

வட்​டார வளர்ச்சி அலு​வலர் வீ.ய​முனா விருது பெற்​றனர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்