இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை இன்று நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. தியாகத் திருநாள் என அழைக்கபடும் பக்ரீத் பண்டிகை இறை தூதர்களில் ஒருவரான இப்ராஹிமின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக கொண்டாடப்படுகிறது. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் பள்ளிவாசல் மற்றும் மைதானங்களில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் திறந்த வெளி மைதானங்களிலும், மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்களிலும் இன்று காலை சிறப்பு தொழுகை நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் இன்று காலை சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டு தங்களது தொழுகையை நிறைவேற்றினர். இந்த தொழுகையின் போது இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து, ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்து வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
Comments are closed.