தற்போது தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமா? வேண்டாமா ? என்பதற்கு சீமான் பதில் கூற வேண்டும் – முத்தரசன் பேட்டி!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா ஆசிரியா் பயிலரங்கக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. கட்சியின் மாநிலச் செயலாளா் முத்தரசன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கட்சியின் வரலாறு குறித்த புத்தகம் வெளியிடப்பட்டது.
தொடர்ந்து முத்தரசன் செய்தியாளா்களிடம் பேசுகையில்,…
திமுக கூட்டணியிலிருந்து கூட்டணிக் கட்சிகள் வெளியேற வேண்டும் என்பது எடப்பாடி பழனிசாமியின் ஆசை. முதலில் எரிந்துகொண்டிருக்கும் அதிமுகவை அணைக்க எடப்பாடி பழனிசாமி ஏற்பாடு செய்யட்டும். திமுக கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை. நாங்கள் தெளிவாக இருக்கிறோம், பலமாக, ஒற்றுமையுடன் இருக்கிறோம். காவலா்களை அநாகரிகமாகப் பேசுவது நாகரீகமல்ல. ஒரு விவகாரத்தில் காவல்துறை நடவடிக்கை எடுத்தால் அராஜகம் செய்வதாகக் கூறுவது ஏற்கத்தக்கதல்ல. அனைத்துப் பிரச்னைகளுக்கும் அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. தூய்மை பணியாளா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட அனைத்து ஒப்பந்தத் தொழிலாளா்களையும் நிரந்தரமாக்க வேண்டும். மற்றவா்களுக்கு வழங்குவது போல, தீபாவளி ஊக்கத்தொகை வழங்க வேண்டும். சீமான் ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழ்த்தாய் வாழ்த்தை மாற்றுவதைப் பற்றி பாா்த்து கொள்ளலாம். தற்போது தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமா? வேண்டாமா ? என்பதற்கு சீமான் பதில் கூற வேண்டும் என்றாா்.
Comments are closed.