வதந்தி வெப் தொடரின் இரண்டாவது சீசனில் சசிகுமார் என்ட்ரி! திருச்சியில் படபிடிப்பு ஆரம்பம்
வதந்தி வெப் தொடரின் இரண்டாவது சீசனில் சசிகுமார் என்ட்ரி! திருச்சியில் படபிடிப்பு ஆரம்பம்
தமிழ் திரையுலகத்தில்
சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சசிகுமார். அதற்குப்பின் ‘ஈசன்’ திரைப்படத்தை இயக்கிய சசிகுமார், அதன்பின் நடிப்பதில் கவனம் செலுத்தினார். இவரது நடிப்பில் வெளியான ‘அயோத்தி’ ‘கருடன், நந்தன்’ ஆகிய திரைப்படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றிப்படங்களாக அமைந்தன. அதனை தொடர்ந்து அபிஷன் இயக்கத்தில் ‘டூரிஸ்ட் பேமிலி என்ற படத்தில் நடித்திருந்த நிலையில் மே 1-ந் தேதி வெளியாகி இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அதனை தொடர்ந்து சசிகுமார் கடந்த 2022-ம் வெளியான ‘வதந்தி’ வெப் தொடரின் இரண்டாவது சீசனில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி இருந்த நிலையில், இன்று திருச்சியில் அதற்கான படப்பிடிப்பு துவங்கப்பட்டுள்ளது, வதந்தி தொடரின் முதல் சீசனில், எஸ்.ஜே.சூர்யா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி மற்றும் லைலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
Comments are closed.