இபிஎஸ்-ஐ மீண்டும் முதல்வர் ஆக்க சூளுரைப்போம் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றம்!

இபிஎஸ்-ஐ மீண்டும் முதல்வர் ஆக்க சூளுரைப்போம் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றம்!

சென்னையில் அ.தி.மு.க. கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அவர் பேசுகையில், அவைத் தலைவர் தமிழ்மகன் உசேனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அ.தி.மு.க. சட்ட விதிகளின்படி துணைச் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தற்காலிக அவைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டு கூட்டத்தை நடத்தி தர வேண்டும் என்று முன் மொழிகிறேன் என்றார்.

இதை திண்டுக்கல் சீனிவாசன் வழிமொழிவதாக கூறினார். இதையடுத்து கே.பி.முனுசாமி தலைமையில் கூட்டம் நடைபெற்றது.சட்டசபை தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே இருக்கும் நிலையில், அ.தி.மு.க.-பா.ஜ. .,கூட்டணியில் வேறு கட்சிகள் இணையவில்லை.

 இந்த பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன:

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

2026 சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றம்.

வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக- பாஜ கூட்டணி சேர்ந்து போட்டியிட அங்கீகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றம்.

கூட்டணியில் யாரை இணைப்பது என்பது தொடர்பாக இ.பி.எஸ் க்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றம்.

நீட், கல்விக்கடன் ரத்து, பழைய ஓய்வூதிய திட்டம், 100 நாள் வேலையை 150-ஆக உயர்த்துவது போன்ற வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை.

Bismi

கடந்த தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றாத தி.மு.க. அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்.

வடகிழக்கு பருவமழையின்போது மக்களை காக்க தவறிவிட்டதாக தி.மு.க. அரசிற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை வரவேற்று தீர்மானம் நிறைவேற்றம்.

கோவை, மதுரை மெட்ரோ விவகாரத்தில் தி.மு.க. அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றம். முறையான தரவுகளுடன் மெட்ரோவிற்கு விண்ணப்பிக்கவில்லை என தீர்மானம் நிறைவேற்றம்.

 நீதித்துறை மீதான ஆட்சியாளர்களின் மிரட்டல்களை கைவிடவேண்டும். நீதித்துறையில் அரசின் தலையீடு இருக்கக் கூடாது. நீதித்துறைக்கே சவால்விடும் ஆட்சியாளர்களின் ஆதிக்க மனநிலையை கண்டித்து தீர்மானம்.

 பட்டியலினத்தை இழிவு செய்தும், ஒடுக்கப்பட்டவர்களை ஒதுக்கி வைப்பதும் திமுக ஆட்சியில் நடந்து கொண்டிருப்பதற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்.

மதுரை மேயர் ராஜினாமா செய்யும் அளவிற்கு ஊழல் நடைபெற்றிருப்பதற்கு கண்டம் தெரிவித்து தீர்மானம்.

நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்த திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம்.

எல்லோருக்கும் எல்லாம் என ஆசைகாட்டி அனைத்து தரப்பு மக்களையும் ஏமாற்றி வருவதாக தி.மு.க. அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்