மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் கட்டப்பட்ட பேருந்து நிலையத்திற்குள் மழை நீர், பயணிகள் அங்கு அமர முடியாத சூழல், இருந்தும் பயனில்லை பயணிகள் ஆதங்கம்
மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் கட்டப்பட்ட பேருந்து நிலையத்திற்குள் மழை நீர், பயணிகள் அங்கு அமர முடியாத சூழல், இருந்தும் பயனில்லை பயணிகள் ஆதங்கம்


தமிழகத்தில் 10 மாவட்டத்திற்கு மேல் இன்று இரவு கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில்

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இரவு 7 மணிக்கு மேல் பரவலாக கனமழை பெய்ய துவங்கியுள்ளது. திருச்சி மாநகர் பகுதியில் சத்திரம் பேருந்து நிலையம், தில்லைநகர், மத்திய பேருந்து நிலையம், ஸ்ரீரங்கம், பாலக்கரை, திருவானைக்காவல், உறையூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதே போல புறநகர் பகுதிகளில் நம்பர் ஒன் டோல்கேட், சமயபுரம், மண்ணச்சநல்லூர், லால்குடி,புள்ளம்பாடி, சிறுகனூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வெப்பமான சூழல் விலகி குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் ஏராளமான வாகன ஓட்டிகள் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது பெய்த கன மழை காரணமாக சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் கட்டப்பட்ட பேருந்து நிலையத்திற்குள் மழை நீர் கொட்டுகிறது.
மழைநீர் உள்ளே கொட்டுவதால் பயணிகள் அங்கு அமர முடியாத சூழல் உருவாகி உள்ளது, 51 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் அமர்வதற்கான இடத்தில் மழை நீர் வழிந்து ஓடுகிறது, பயணிகள் பேருந்து நிலையம் இருந்தும் பயனில்லை என்று ஆதங்கப்படுகின்றனர்.





Comments are closed.