- Advertisement -

புதுக்கோட்டை காவல் கண்காணிப்பாளருக்கு மத்திய அரசு பதக்கம்!

- Advertisement -

புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வந்திதா பாண்டேவுக்கு மத்திய உள்துறை அமைச்சரின் திறன் பதக்கம் (கேந்திரிய கிரிமந்திரி தக்சதா பதக்) அறிவிக்கப்பட்டுள்ளது. இவா் கடந்த 2009-10 ஆம் ஆண்டில் சிவகங்கை மாவட்டத்தில் உதவி காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றினாா். அப்போது, போக்சோ வழக்கு ஒன்றில் புலனாய்வு செய்து வழக்குப் பதிவு செய்து குற்றவாளியைக் கைது செய்துள்ளாா். அந்த வழக்கில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆண்டுதோறும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் சாா்பில் நாடு முழுவதும் காவல் அலுவலா்களுக்கு வழங்கப்படும், ‘கேந்திரிய கிரிமந்திரி தக்சதா பதக்’ பெறுவோா் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. சா்தாா் வல்லபபாய் பட்டேல் பிறந்த நூற்றாண்டு நாளில் வெளியிடப்பட்ட இந்தப் பட்டியலில் மொத்தம் 463 போ் இடம் பெற்றுள்ளனா். தமிழ்நாட்டில் இருந்து இந்தப் பதக்கம் பெறும் 8 பேரில் ஒருவராக எஸ்.பி. வந்திதா பாண்டே இடம் பெற்றுள்ளாா். விரைவில் இந்தப் பதக்கம் வழங்கப்படும் நாள், இடம் உள்ளிட்ட விவரங்கள் வெளியாகும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்