நடிகர் ரஜினிகாந்துடன் கவிஞர் வைரமுத்து சந்திப்பு!

நடிகர் ரஜினிகாந்துடன் சந்தித்துக்கொண்ட கவிஞர் வைரமுத்து அரசியில் உட்பட பல்வேறு விஷங்களை பேசியதாக பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள பதிவில்,

- Advertisement -

கடிகாரம் பாராத உரையாடல் சிலபேரோடுதான் வாய்க்கும் அவருள் ஒருவர்சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 80நிமிடங்கள்உரையாடியிருக்கிறோம். ஒரே ஒரு ‘கிரீன் டீ’யைத் தவிர எந்த இடைஞ்சலும் இல்லை. இடைவெளியும் இல்லை. சினிமாவின் அரசியல், அரசியலின் சினிமா வாழ்வியல் – சமூகவியல் கூட்டணிக் கணக்குகள், தலைவர்கள், தனிநபர்கள் என்று எல்லாத் தலைப்புகளும் எங்கள் உரையாடலில் ஊடாடி ஓய்ந்தன. எதுகுறித்தும் அவருக்கொரு தெளிவிருக்கிறது. தன்முடிவின் மீதுஉரசிப் பார்த்து உண்மை காணும் குணம் இருக்கிறது. நான் அவருக்குச் சொன்ன பதில்களைவிட அவர் கேட்ட கேள்விகள் மதிப்பு மிக்கவை. தவத்திற்கு ஒருவர் தர்க்கத்திற்கு இருவர். நாங்கள் தர்க்கத்தையே தவமாக்கிக் கொண்டோம். ஒரு காதலியைப் பிரிவது போல் விடை கொண்டு வந்தேன். இரு தரப்புக்கும் அறிவும் சுவையும் தருவதே ஆரோக்கியமான சந்திப்பு. அது இது என குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்