திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளரால் நடத்தப்பட்ட,மக்கள் குறைதீர்ப்பு நாள் முகாம் நிகழ்ச்சி!
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளரால் நடத்தப்பட்ட,மக்கள் குறைதீர்ப்பு நாள் முகாம் நிகழ்ச்சி!
திருநெல்வேலி மாவட்டத்தில்
தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவுப்படி, வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நிகழ்ச்சி, வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையும், அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று [ஜூலை.30] காலையில், பாளையங்கோட்டை மிலிட்டரி லைன் பகுதியிலுள்ள, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன் தலைமையில் நடைபெற்றது.
இந்த முகாமில், மனு கொடுக்க வந்த மாவட்ட மக்களிடம் இருந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன், மனுக்களை நேரடியாக பெற்றுக் கொண்டார். அதன்பிறகு மனுதாரர்களிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர், “பெறப்பட்ட மனுக்கள் மீது, முறையாக விசாரணை நடத்தப்பட்டு, உரிய நடவடிக்கை மிக விரைவில் எடுக்கப்படும்!”- என்று, உறுதியளித்தார். தொடர்ந்து, மனுக்கள் மீதான விசாரணைகளை, உடனடியாக முடிப்பதற்கு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, அவர் உத்தரவிட்டார்.
Comments are closed.