எம்ஜிஆர் நினைவு நாளில் முடிவை அறிவிக்கிறார் ஓபிஎஸ்!
டிசம்பர் 15 ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைப்பு!
எம்ஜிஆர் நினைவு நாளில் முடிவை அறிவிக்கிறார் ஓபிஎஸ்!
டிசம்பர் 15 ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைப்பு!

ஓ.பன்னீர்செல்வம் தனது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்த முடிவை அறிவிப்பதற்காக டிசம்பர் 15-ம் தேதி நடைபெறவிருந்த ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் செயல்பட்டு வருகிறார்.2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக தனி அணியாக போட்டியிட்ட நிலையில், சில மாதங்களுக்கு முன்பு பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணைந்தது. தமிழகத்தில் அந்த கூட்டணியின் தலைவராக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இருப்பார் என பாஜக அறிவித்த நிலையில் பாஜகவின் பார்வை ஓபிஎஸ் மீது படவில்லை. இதனால் விரக்தியடைந்த ஓபிஎஸ் பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறினார்.
அதன் பின்னரும் அதிமுகவில் இணைய பல கட்ட முயற்சிகளை செய்த நிலையில் அவை பலிக்காததால், அரசியலில் தனது அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து டிசம்பர் 15-ம் தேதி அறிவிப்பதாக கூறியிருந்தார் ஓ.பன்னீர்செல்வம். இந்தச் சூழலில், சமீபத்தில் டெல்லி சென்ற ஓபிஎஸ், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார்.இதனையடுத்து, டிசம்பர் 15-ம் தேதி நடைபெறவிருந்த ஓபிஎஸ்ஸின் ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசிய பிறகு இப்போது டெல்லி சென்றுள்ளார். ஓ.பன்னீர்செல்வம் விஷயம் தொடர்பாக அமித்ஷாவை சந்தித்து பேசுவார் என தெரிகிறது.தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைப்பது குறித்து விவாதிப்பார் என தெரிகிறது. இந்தப் பயணம், அதிமுக – பா.ஜ.க கூட்டணியின் முக்கிய அம்சமாக மாறும் என எதிரிக்கப்படுகிறது .மேலும், எம்ஜிஆரின் நினைவுதினமான டிசம்பர் 24ஆம் தேதி ஓபிஎஸ் தனது நிலைப்பாட்டை அறிவிப்பார் என எதிரிக்கப்படுகிறது .


Comments are closed.