பிரபல பின்னணிப் பாடகர் கார்த்திக் கலந்து கொள்ளும் இசைக் கச்சேரி திருச்சி மொரைஸ் சிட்டியில் டிச.14 ஆம் தேதி நடைபெற உள்ளது!
பிரபல திரைப்பட பின்னணி பாடகர் கார்த்திக் கலந்து கொள்ளும் “கார்த்திக் லைவ் இன் திருச்சி” இசைக் கச்சேரி வரும் 14 ஆம் தேதி திருச்சி மொரைஸ் சிட்டியில் நடைபெற உள்ளது. இது குறித்த பத்திரிக்கையாளர்கள் மற்றும் இன்ஃப்ளுயன்சர்ஸ் சந்திப்பு நிகழ்ச்சி திருச்சி தஞ்சை சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் “கார்த்திக் லைவ் இன் திருச்சி” ஈவன்ட் நிர்வாகி ராஜன் ராஜ்மோலி செய்தியாளர்களிடம் கூறுகையில்…
பிரபல திரைப்படப் பின்னணிப் பாடகரான கார்த்திக் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒடியா, பெங்காலி, மராத்தி மற்றும் இந்தி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் 8000 க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். குறிப்பாக பாய்ஸ் திரைப்படத்தில் அவர் பாடிய “எனக்கொரு கேர்ல்பிரண்ட் வேணுமடா” என்ற பாடலும் கஜினியில் “ஒரு மாலை இளவெயில் காலம்” பாடலும், வாரணம் ஆயிரம் படத்தில் அவர் கானா வகையில் பாடிய “அவ என்ன தேடி வந்த அஞ்சலை” என்ற பாடலும் பெரும் வரவேற்பைப் பெற்றதன் மூலம் ரசிகர் மனதில் நீங்கா இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக திரைப்பட பாடகர் இசை அமைப்பாளர் நடிகர் விஜய் ஆண்டனியை வைத்து இசை நிகழ்ச்சி ஒன்றை திருச்சியில் மிக பிரம்மாண்டமாக நடத்தினார். அதனைத் தொடர்ந்து திருச்சி ரசிகர்களின் செவிகளை இனிமையாக்கும் விதமாக ராஜ் மெலோடிஸ் ஏற்பாட்டில் பிரபல அஸ்வின் ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் சார்பில் வருகிற டிசம்பர் 14ம் தேதி, பிரபல திரைப்பட பின்னணிப் பாடகர் கார்த்திக்கின் “கார்த்திக் லைவ் இன் திருச்சி” இசை கச்சேரி திருச்சி விமான நிலையம் அடுத்துள்ள மொரைஸ் மெஜஸ்டிக்கில் நடைபெற உள்ளது. இந்த இசை நிகழ்ச்சியில் பாடகர் கார்த்திக் நேரடி இசையின் மாயாஜாலத்தால் இசை ரசிகர்களுக்கு மறக்க முடியாத இரவாக அமைய போகிறது என தெரிவித்தார்.
இந்த இசை நிகழ்ச்சியில் திருச்சி மக்கள் மற்றும் பின்னணி பாடகர் கார்த்திக்கின் ரசிகர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு இசை நிகழ்ச்சியை சிறப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் கார்த்திக் லைப் இன் திருச்சி இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் தற்போது விற்பனையாகி வருகிறது என தெரிவித்தார்.
Comments are closed.