சாதிக்கொரு நீதியா சமூக விழிப்புணர்வு நாடகத்தின் நோட்டீஸ் வெளியீடு
சாதிக்கொரு நீதியா சமூக விழிப்புணர்வு நாடகத்தின் நோட்டீஸ் வெளியீடு
பன்முக கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பு திருச்சி மாவட்ட ஆதரவுடன் ஸ்ரீ சாய் மித்ரா கலை குழு வழங்கும் சாதிக்கொரு நீதியா சமூக விழிப்புணர்வு நாடகம், தஞ்சாவூர் காவிரி அன்னை கலை மன்றம் வழங்கும் 53 ஆம் ஆண்டு நாடக போட்டி விழாவில் மாபெரும் கலைஞர் நகைச்சுவை நடிகர் என். ரமேஷ்குமார் அவர்கள் சமர்ப்பணம் செய்யும் வகையில் 28.07.2023 நாளை நடைபெற உள்ளதால் அதற்கான விழிப்புணர்வு நோட்டீசை போலீஸ் பார்வை பத்திரிகை ஆசிரியர் டாக்டர் என்.பாலகிருஷ்ணன், தமிழ்நாடு ஏரோஸ்கேட்டோபால் சங்கத்தின் தலைவர் என்.ராகேஷ் சுப்ரமணியன், வழக்கறிஞர் சிவகுமார், பண்ப கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் நிறுவனத் தலைவர் நடிகர் வேல்முருகன் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர். உடன் திருச்சி மாவட்ட துணை தலைவர் அன்வர்தீன், திருச்சி மாவட்ட செயலாளர் அய்யப்பன் மற்றும் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.