பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் முதல் பொதுக்குழு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சியில் நடைபெற்றது.
பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் முதல் பொதுக்குழு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சியில் நடைபெற்றது.
இயல் இசை நாடக பன்முகக் கலைஞர்களின் நலவாழ்வு குறித்து துவங்கப்பட்ட அமைப்பு பன்முகக் கலைஞர்களின் நலவாழ்வு அறக்கட்டளையின் அமைப்பு, திருச்சியை தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வருகிறது, இன்று அமைப்பின் முதல் பொதுக்குழு கூட்டம் தலைமை நிர்வாகக் குழு தலைமையில், திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திருவெறும்பூர் காவல் துணை கண்காணிப்பாளர் அறிவழகன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பன்முகக் கலைஞர்களின் குழந்தைகள் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டி சான்றிதழ் வழங்கி, நலத்திட்ட உதவிகளை துவக்கி வைத்தார்,
பன்முக கலைஞர்கள் உடல்நலம் நலமுடன் இருக்க வேண்டும் என்பதற்காக திருச்சி சிததார் மருத்துவமனையின் உதவியுடன் முதல் பொதுக்குழு கூட்டத்தில் மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, அதனை மாமனித நாடக நடிகர் சங்கத்தின் தலைவர் டேவிட் அவர்கள் துவக்கி வைத்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் தமிழ் குரல் பவுண்டேஷன் புருஷோத்தமன், கவிதா புருஷோத்தமன்,
ஜோய் ஆலுக்காஸ் மேலாளர் நிஷித்லால், அனைத்திந்திய சித்த மருத்துவர் சங்கம் தலைவர் கே.எஸ் சுப்பையா பாண்டியன், போலீஸ் பார்வை ஆசிரியர் பாலகிருஷ்ணன், தலைவர் தமிழ்நாடு ஏரோஸ்கேட்டோபால் சங்கத்தின் தலைவர் ராகேஷ் சுப்ரமணியன், பரோடா பைனான்ஸ் மாநிலத் தலைவர் பழனிராஜ், சிததார் மருத்துவமனை எம்டி கார்த்திக் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பன்முக கலைஞர்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினர். மேலும் இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் திருச்சி மாவட்ட தலைவர் எஸ் பி பாபு,
ஜே கே சி அறக்கட்டளை தலைவர் டாக்டர் பா.ஜான்ராஜ் குமார், பேராசிரியர் ரவி சேகர்,
பாஜக பொருளாதார பிரிவு மாநில செயலாளர் வெங்கடேஷ் (எ) சுதாகர், சட்ட ஆலோசகர் CBரமேஷ்,
SKD வினோதினி நினைவு கல்வி & சமூக நல அறக்கட்டளை நிறுவன தலைவர் SKD பாண்டியன், இந்து சேனா பேரியக்கம் மாநில செய்தி தொடர்பாளர் வீரேந்திரகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதல் பொதுக்குழு கூட்டத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நாடகம் கவிதை வாசித்தல் பாடல் நடனம் பரதநாட்டியம் புல்லாங்குழல் இசை போன்ற நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் பங்கு பெற்ற பன்முகக் கலைஞர்களுக்கு நினைவு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவப்படுத்தினார்கள்.
தொடர்ந்து அகல்கி அழகு மற்றும் ஆரோக்கியம் திருச்சி சென்னை நிறுவனத் தலைவர்
ST தேவிகா அவர்களுக்கு
ஒப்பனை கலைத்திறமையை பாராட்டி சிறந்த சாதனைப் பெண்மணி விருது (2023) பன்முகக் கலைஞர்களின் நலவாழ்வு அமைப்பு சார்பில் சிறப்பு விருந்தினர் திருவெறும்பூர் காவல் துணை கண்காணிப்பாளர் அறிவழகன் அவர்கள் வழங்கினார்,
மேலும் பொதுக்குழு கூட்டத்திற்கு வருகை தந்திருந்த அனைத்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கும் பன்முக கலைஞர்கள் நல வாழ்வு அமைப்பின் உறுப்பினர் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியானது மாநில ஒருங்கிணைப்பாளர் பகுருதீன் அலி அகமது அவர்களின் ஒருங்கிணைப்பில், நிறுவனத் தலைவர் வேல்முருகன் பொதுச் செயலாளர் பழனி முருகன் பொருளாளர் பாலமுருகன் தலைமையில், மாநிலச் செயலாளர் திருச்சி ரமேஷ், மாநில மக்கள் தொடர்பாளர் டூயட் சசிகுமார், மாநில மகளிர் அணி தலைவி பொன்முடி பன்னீர்செல்வம், துணைத் தலைவர் நந்தினி, துணைச் செயலாளர் பவித்ரா, பெங்களூர் பகுதி பொறுப்பாளர் சரசு, கர்நாடக மாநில தலைவர் விஜய் பிரேமா ஆகியோர் முன்னிலையில், திருச்சி மாவட்ட தலைவர் என்டி.முருகன், திருச்சி மாவட்ட துணை தலைவர் அன்வர்தீன், திருச்சி மாவட்ட செயலாளர் ஐயப்பன், திருச்சி மாவட்ட மக்கள் தொடர்பாளர் ஹரிஹரன் ஆகியோர்களின் ஏற்பாட்டில் முதல் பொதுக்குழு கூட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது, நிகழ்ச்சியின் முடிவில் மாநில இணைச் செயலாளர் பாரதி பொன்னுச்சாமி அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.