ஆளுநர் விருது பெற்ற சமூக செயற்பாட்டாளர்க்கு பாராட்டு!
ஆளுநர் விருது பெற்ற சமூக செயற்பாட்டாளர்க்கு பாராட்டு!

உரிமைக்கோரப்படாத ஆதரவற்ற சடலங்களை கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்து வரும் திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் சமூகப் பணியினை பாராட்டி தமிழ்நாடு ஆளுநர், குடியரசு தினத்தன்று தனிநபர் பிரிவில் ஆளுநர் விருதினை வழங்கினார். ஆளுநர் விருது பெற்ற யோகா ஆசிரியர் விஜயகுமாரை தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் டியூஜே திருச்சிராப்பள்ளி மாவட்டத் தலைவர் பாலாஜி தேசிய செயற்குழு உறுப்பினர் சுப்பையா பாண்டியன், திருச்சி மாநகராட்சி மேனாள் சுகாதாரத் துறை தலைவர் தமிழரசி முன்னிலையில் பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.


Comments are closed.