சுறுசுறுப்பளிக்கும் சுக்கு வெந்நீர்!
சுறுசுறுப்பளிக்கும் சுக்கு வெந்நீர்!
இப்போதைய நாகரீக உலகில் பலர் சுக்கு என்றால் என்ன? என்று கேட்கும் நிலையே உள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை நகர்ப்புறங்களிலும் கிராமங்களிலும் பெரும்பாலான வீடுகளில் வாரம் ஒருமுறை சுக்கு வெந்நீர் தயாரித்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீட்டில் உள்ள அனைவருக்கும் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். சென்னை போன்ற பெருநகரங்களிலும், மைசுரோ Cudio (micro family) எனப்படும் 3 அல்லது 4 பேரைக் கொண்ட தனிக்குடித்தனங்களிலும் சுக்கு வெந்நீர் என்பது கானல் நீர் எனலாம்.

விருந்து விழாக்கள், அலுவலகப் பார்ட்டி என்று பல இடங்களிலும் பலவேறு விதமான உணவு வகைகளைச் சாப்பிட்டு அஜீரணத்திற்கு உள்ளாவோர் இந்த சுக்கு வெந்நீரை 200 மிலி அளவுக்கு வாரம் ஒரு முறை அருந்தி வந்தால், உடலில் தேவையற்ற கொழுப்புகள் சேராமல் தவிர்ப்பதோடு புத்துணர்ச்சியையும், சுறுசுறுப்பையும் தரும்.
சுக்கு வெந்நீரானது கிராமங்களில் சிறு ஹோட்டல் போன்ற கடைகளில் கிடைக்கும் அல்லது வீட்டிலும் நாமே தயாரித்து பருகலாம். சிறிதளவு சுக்கினை சிறுசிறு துண்டுகளாக்கியோ அல்லது பொடித்தோ தண்ணீரில் கொதிக்க வைத்து வெல்லம் பனங்கற்கண்டு அல்லது கருப்பு கட்டி (பனைவெல்லம் ஆகிய ஏதாவதொன்றை தேவையான அளவுககு சோத்து வடிகட்டி குடிக்கலாம்.
சுக்கு உடன் சேர்த்து சாரணவோ, மிளகு, திப்பிலி ஆகியவற்றையும் சேர்தது கஷாயம் தயாரித்தும் அருந்தி வந்தால் சளி, இருமல போன்றவே நமமை அண்டாமல் போயே போய் விடும்.


Comments are closed.