மகாத்மா காந்தி பிறந்தநாளையொட்டி சென்னை எழும்பூர் அருங்காட்சியத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் முக.ஸ்டாலின் இன்று மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். இந்திய சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய தேசத்தந்தை என போற்றப்படும் மகாத்மா காந்தியின் 156வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் மகாத்மா காந்தியின் நினைவிடம், சிலைகள் மற்றும் திருவுருவப்படங்களுக்கு மலர்த்தூவியும், மாலையணிவித்தும் மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலையணிவித்தும், மலர்த்தூவியும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியின்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியம், சென்னை மேயர் பிரியா உள்பட பலர் உடன் இருந்தனர்.
Comments are closed.