சீன அதிபரை சந்தித்த பிரான்ஸ் அதிபர் உக்​ரைன் போரை நிறுத்​த புதினிடம் வலி​யுறுத்த வேண்டுகோள்.

சீன அதிபரை சந்தித்த பிரான்ஸ் அதிபர்

உக்​ரைன் போரை நிறுத்​த புதினிடம்

வலி​யுறுத்த வேண்டுகோள்.

 உக்​ரைனுடன் போர் நிறுத்​தம் செய்ய ரஷ்​யாவை சீனா வலி​யுறுத்த வேண்​டும் என சீன அதிபர் ஜி ஜின்​பிங்​கிடம், பிரான்ஸ் அதிபர் இம்​மானுவேல் மேக்​ரான் வேண்​டு​கோள் விடுத்துள்​ளார்.

உக்ரைன்-ரஷியா போர் ஒரு ஆண்டை கடந்து நடந்து வருகிறது . இந்த போர் சம்பந்தப்பட்ட இரு நாடுகளை மட்டுமின்றி சர்வதேச அளவில் பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தியது. ஏனெனில் கச்சா எண்ணெய் உற்பத்தியில் ரஷியா முதன்மை நாடாக உள்ளது. இதனால் போரை நிறுத்த உலக நாடுகள் முயன்று வருகின்றன. அதன் ஒருபகுதியாக இரு நாடுகளும் பேச்சு வார்த்தை நடத்துமாறு வலியுறுத்தப்பட்டது.அதுபோல ரஷியாவுக்கு ஆதரவாக அதன் நட்பு நாடான சீனா இருந்து வந்தது. இதனையடுத்து சீனாவும் சமீபத்தில் உக்ரைன் போரை நிறுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தது. அதன்படி ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சீன அதிபர் ஜின்பிங் சந்தித்து பேசினார். இதற்கு ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் வரவேற்பு தெரிவித்தன. இந்தநிலையில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சீன அதிபர் ஜின்பிங்கை அவரது மாளிகையில் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். 3 நாள் அரசு முறைப் பயண​மாக பிரான்ஸ் அதிபர் இம்​மானுவேல் மேக்​ரான் சென்​றுள்​ளார்.

Bismi

அதன்​பின் மேக்​ரான் அளித்த பேட்​டி​யில் கூறிய​தாவது:

சர்​வ​தேச ஒழுங்கு முறை காரண​மாக பல ஆண்​டு​களாக உலகில் அமைதி நிலவி வந்​தது. அந்த ஒழுங்கு சிதை​யும் அபா​யம் தற்​போது ஏற்​பட்​டுள்​ளது.இந்​நிலை​யில் சீனா – பிரான்ஸ் இடையே​யான பேச்​சு​வார்த்தை மிக முக்​கிய​மானது. உக்​ரைனின் முக்​கிய

கட்​டமைப்​பு​களை குறி​வைத்து ரஷ்யா தாக்​குதல் நடத்தி வரு​கிறது. அதனால் கூடிய விரை​வில் இரு நாடு​கள் இடையே போர் நிறுத்​தம் ஏற்பட நாம் முயற்​சிகள்

மேற்​கொள்ள வேண்​டும். எங்​களின் முயற்​சி​யில் சீனா இணை​யும் என நம்​பு​கிறேன். இவ்​வாறு மேக்​ரான் கூறி​னார்.

சீன அதிபர் ஜி ஜின்​பிங் அளித்த பேட்​டி​யில் கூறிய​தாவது:

அமை​தியை நோக்கிய அனைத்து முயற்​சிகளை​யும் சீனா ஆதரிக்​கிறது. அனைத்து தரப்​பினரும் ஏற்​கும்​படி​யான அமைதி ஒப்​பந்​தம் ஏற்பட வேண்​டும். காசா​வின் மீட்பு பணிக்கு சீனா 100 மில்​லியன் அமெரிக்க டாலர் நிதி உதவி அளிக்​க​வுள்​ளது. ஏரோஸ்​பேஸ், ஏரோ​னாடிக்​ஸ், அணு சக்​தி, பசுமை தொழில்​கள் மற்​றும் செயற்கை நுண்​ணறிவு ஆகிய துறை​களில் இரு நாடு​களும் அதிக ஒத்​துழைப்​புடன் செயல்​பட ஒப்​புக்​ கொண்டுள்ளோம்.இவ்​வாறு ஜி ஜின்​பிங் கூறி​னார்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்