அட்சய திருதியை முன்னிட்டு திருச்சியில் நகை கடைகளில் குவிந்த மக்கள் கூட்டம்!

தங்கம் மீது பொதுமக்களுக்கு எப்போதும் ஓர் ஈர்ப்பு உண்டு. அதிலும், ஆபரணத் தங்கமாக வாங்குவதில் கூடுதல் ஆர்வம் காட்டுகின்றனர். மேலும், அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்ற நம்பிக்கையும் மக்களிடம் உள்ளது.

இந்நிலையில், அட்சய திருதியை நாளான இன்று, திருச்சியில் தங்கம் வாங்க பொதுமக்கள் நகை கடைகளில் குவிந்து வருகின்றனர். இதனால் திருச்சி பெரிய கடை வீதி, என்.எஸ்.பி சாலை, சிங்காரதோப்பு ஆகிய பகுதிகளில் உள்ள நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

- Advertisement -

அட்சய திருதியை முன்னிட்டு நகைக் கடைகள் இன்று அதிகாலையிலேயே திறக்கப்பட்டன. வாடிக்கையாளர்களை கவர்வதற்காக தங்க நகைகள் கிராமுக்கு ரூ.60 முதல் ரூ.100 வரை தள்ளுபடியும், சில கடைகளில் தங்க நகைககளுக்கு செய்கூலி, சேதாரம் தள்ளுபடியும் வழங்கப்பட்டன.

நகை வாங்கிய பொதுமக்கள் கூறுகையில், அட்சய திருதியை அன்று நகை வாங்கினால் வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. அதன் அடிப்படையில் இன்று நகை வாங்க வந்துள்ளோம். இதற்காகவே நகை சீட்டு மூலம் பணத்தை சேமித்து இன்று நகை வாங்கியுள்ளோம். இந்த நாளில் அனைவரும் தங்கம் வாங்கி வளமுடன் வாழ வேண்டும், அனைவருக்கு அட்சய திருதியை நல் வாழ்த்துக்கள் என தெரிவித்தனர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்