ஏர் கலப்பையுடன் வந்து வேட்புமனு தாக்கல், திருச்சி கிழக்கில் நாம் தமிழர் கட்சியினர் அதிரடி!

திருச்சி:

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மருத்துவர் வே. கிருஷ்ணசாமி (MBBS., MD.,) இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
இந்த நிகழ்வின் சிறப்பம்சமாக, நாம் தமிழர் கட்சியின் தேர்தல் சின்னமான ‘விவசாயி’ சின்னத்தை முன்னிலைப்படுத்தும் வகையில், வேட்பாளர் கிருஷ்ணசாமி மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கையில் ஏர் கலப்பையை ஏந்தியபடி ஊர்வலமாக வந்தனர்.

மண்ணின் மரபையும், விவசாயிகளின் முக்கியத்துவத்தையும் பறைசாற்றும் வகையில் அமைந்த இந்த ஊர்வலம் பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.
திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள வ.உ.சி சிலை முன்பிருந்து கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகப் பங்கேற்றனர்.
“வெல்லட்டும் விவசாயி”, “மாற்றம் ததும்பும் நாம் தமிழர்” போன்ற முழக்கங்களுடன் உற்சாகமாக ஊர்வலம் தேர்தல் அலுவலகத்தை சென்றடைந்தது.
வேட்புமனு தாக்கல்: காலை 11.00 மணியளவில், உரிய ஆவணங்களுடன் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மருத்துவர் வே. கிருஷ்ணசாமி தனது வேட்புமனுவை சமர்ப்பித்தார்.
மருத்துவர் கிருஷ்ணசாமி, “திருச்சி கிழக்கு தொகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், விவசாயம் மற்றும் சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் நாம் தமிழர் கட்சி உறுதியாக பாடுபடும். மக்கள் மாற்றத்தை விரும்புவதால் இந்த முறை விவசாயி சின்னத்திற்குப் பெரும் ஆதரவு கிடைக்கும்” என நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் கட்சியின் மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டு தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.





Comments are closed.