மத்திய அரசு தமிழகத்திற்கு கூடுதல் நிதியை ஒதுக்கி உள்ளது – பாஜக தேசிய மின்நூலகம் மற்றும் ஆவணப்படுத்துதல் துறை ஒருங்கிணைப்பாளா் ஆசீா்வாதம் ஆச்சாரி பேட்டி!

பாஜக தேசிய மின் நூலகம் மற்றும் ஆவணப்படுத்துதல் துறை ஒருங்கிணைப்பாளர் ஆசீர்வாதம் ஆச்சாரி, திருச்சி மாவட்ட பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்…

தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, மத்திய அரசு பள்ளி கல்வித்துறைக்கு உரிய நிதியை வழங்கவில்லை என பொய் சொல்லி வருகிறார். மத்திய அரசு மாநில அரசிற்கு தேவையான நிதியையும் தாண்டி கூடுதலாக வழங்கி வருகிறது. மாநில அரசின் பிரச்சனையை அவர்கள் தான் தீர்க்க வேண்டும். 1050 கோடி ரூபாயை கடந்த மூன்றாண்டுகளில் மத்திய அரசு வழங்கியுள்ளது. அந்த பணத்திற்கு மாநில அரசால் பதில் கூற முடியுமா?. சமக்ர சிக்ஷா திட்டத்திற்கு நிதி வழங்கவில்லை என தொடர்ந்து பேசி வருகிறார். கம்யூட்டர்கள் இல்லாத பள்ளிக்கூடங்கள் தமிழகத்தில் உள்ளது. தமிழ் எழுத்துகளை கூட படிக்க தெரியாத அளவிற்கு நடுநிலைப்பள்ளி மாணவர்கள் உள்ளனர். இது வெட்கக்கேடானது. அமைச்சர் செய்யும் ஊழல்களை நிறுத்தி விட்டு, கல்வித்துறையை சரி செய்து விட்டு, மாநில அரசு மத்திய அரசிடம் என்ன கேட்க வேண்டுமோ அதனை கேட்கலாம். கேட்பதற்கு முன்பாகவே இந்த திட்டத்திற்கு உரிய நிதியை மோடி வழங்குவார். அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு முன்னெடுக்கும்.

- Advertisement -

விஸ்வகர்மா திட்டத்தில்
எந்த சமுதாயத்தை சேர்ந்தவர்களும் தொழில் செய்யலாம். அவர்கள் வரவேற்கப்படுகிறார்கள். திட்டத்தின் பெயரில் மட்டும்தான் விஸ்வகர்மா என்று உள்ளது. எந்த தொழிலும் செய்யகூடாது என தடை கிடையாது. பிரதமரின் புகழுக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்று மாநில அரசு விஸ்வகர்மா திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டு, மற்றொரு திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

2ஜி வழக்கின் மிக முக்கியமான சாட்சி, அரசு சாட்சி நான்தான். என்னுடைய சாட்சியத்தின் அடிப்படையில் 2ஜி வழக்கு நடைபெற்று வருகிறது. கீழமை நீதிமன்றம் சாட்சிகள் சரியாக அமையவில்லை என கூறியுள்ளனர். சிபிஐ அதற்கு எதிராக டெல்லி மேல் கோர்ட்டில் அப்பீல் செய்துள்ளனர்.

2024 ஆம் ஆண்டு நீதிபதி தினேஷ் குமார் சர்மா இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரிப்பதற்கு முகாந்திரம் இருக்கிறதா, இல்லையா என தீர விசாரித்து 120 பக்கம் கொண்ட உத்தரவை பிறப்பித்தார். அந்த உத்தரவின் ஒவ்வொரு பக்கத்திலும் ஆசீர்வாதம் ஆச்சாரி வழங்கிய சாட்சியம், சரியான சாட்சியம். இந்த சாட்சியின் அடிப்படையை கொண்டு இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரிக்க வேண்டும் என நீதிபதி தெளிவாக கூறியுள்ளார்.

நேற்று இந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வந்தது. ஏற்கனவே விசாரித்த நீதிபதி பணி காலம் முடிந்து விட்டதால், தற்போது நீதிபதி மகாஜன் இந்த வழக்கை விசாரித்து வருகிறார். மார்ச் 18 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. மார்ச் 18 இல் இருந்து தினம் தோறும் இந்த வழக்கு விசாரணைக்கு வரும். பேப்பர் வேலைகள் முடிந்து விட்டது. அதிகபட்சமாக மூன்று அல்லது நான்கு மாதங்களில் இந்த வழக்கு விசாரணை முடிந்து டெல்லி ஹை கோர்ட் உரிய தீர்ப்பை வழங்கும் என எதிர்பார்க்கிறேன் என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினா் புரட்சிக் கவிதாசன், மாநகா் மாவட்டத் தலைவா் ஒண்டிமுத்து உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்