திருச்சி மாவட்டம் பொன்மலைப்பட்டியில் உள்ள மாவடிகுளத்தில் பல நாட்களாக மீன்கள் இறந்து கிடப்பதாகவும், இதனால் அந்த மாவடிகுளத்தை சுற்றியுள்ள சுமார் 1000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சுகாதார சீர்கேட்டிற்கு ஆளாவதாக, பாஜக அரியமங்கலம் மண்டல் தலைவர் பாலகுமாரிடம் புகார் மனு அளிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் பாஜக திருச்சி மாவட்ட தலைவர் ஒண்டிமுத்து நேற்று மாவடிகுளத்தில் மீன்கள் இறந்து கிடப்பதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து மீன்கள் எப்படி இறந்தது, தண்ணீரில் ஏதும் கலக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய அந்த குளத்தின் தண்ணீரை ஆய்வுக்கு அனுப்பினார். இந்த நிகழ்வில் பாஜக சேர்ந்த மாநில செயலாளர் ஜெபி என்ற ஜெயராம் பாண்டியன், இளைஞரணி மாநில பொதுசெயலாளர் கெளதம், மாநில செயற்குழு உறுப்பினர் குரு, மாவட்ட செயலாளர் ரவிக்குமார், முன்னாள் மண்டல் தலைவர் சண்முகவடிவேல், அரியமங்கலம் மண்டலை சேர்ந்த ஆனந்த், குரு, ஜெயச்சந்திரன், முருகபாண்டியன், சந்திரசேகர், துர்கா, செல்லமணி, முத்துராம் மற்றும் மாநில, மாவட்ட, மண்டல் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Comments are closed.