ஸ்டாலின் கூறுவது போல வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தல் பாஜகவை தூக்கி எறியக்கூடிய தேர்தலாக அமையும் – காதர் மொய்தீன் திருச்சியில் பேட்டி!

0

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன் திருச்சி பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்…

 

அகில இந்திய கேரளா முஸ்லிம் கலாச்சார மையம் சார்பில் தமிழகத்தில் 75 இலவச திருமணங்கள் நடத்தப்பட உள்ளது. ஏற்கனவே சென்னையில் 17 திருமணங்கள் நடைபெற்ற நிலையில் இன்றைய தினம் (23.11.23) திருச்சி சிறுகனூரில் உள்ள எம்ஏஎம் பொறியியல் கல்லூரியில் 25 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற உள்ளது. இதில் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று திருமணத்தை நடத்தி வைக்க உள்ளனர். வரும் ஆண்டுகளில் 100 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்க உள்ளோம்.

- Advertisement -

ஸ்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தமிழகத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளது, தற்போது நவாஸ்கனி எம்பி இராமநாதபுரம் எம்பியாக உள்ளார், மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட வேண்டும் என பலரும் விரும்புவதால் தொகுதி ஒதுக்கீடு என்பது கூட்டணி கட்சி தலைமையே முடிவு செய்யும். தற்போதும் ராமநாதபுரத்தையே ஒதுக்குவார்கள் என நம்புகிறோம். இல்லாவிட்டால் அடுத்தது பற்றி யோசிப்போம்.

இதுவரை தமிழகத்துக்கு வந்த ஆளுநர்களில் தமிழகத்திற்கு ஆதரவு தெரிவிப்பவர்களாகவே இருந்தார்கள், ஆனால் தற்போதைய ஆளுநர் ஆதரவாக இல்லாமல் எதிர்க்கட்சியாக உள்ளார். தமிழகத்தில் அதிமுக எதிர்க்கட்சி இல்லை ஆளுநர் தான் மோசமான எதிர்கட்சியாக முன்னிலைப்படுத்திக்கொண்டு இருந்து வருகிறார். சட்டத்தை உதாசீனப்படுத்தி செயல்பட்டு வருகிறார். உச்சநீதிமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக நல்ல தீர்ப்பு வரும், அப்போது தமிழக அரசு நிறைவேற்றி உள்ள அனைத்து தீர்மானங்களும் மசோதாக்களும் திரும்பவும் நிறைவேற்றி ஆளுநரால் ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேறும்.

ஐந்து மாநில தேர்தல் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்தியா கூட்டணியில் உள்ளவர்களுக்கு அதிக வெற்றி வாய்ப்பு உள்ளதாகவே கூறப்படுகிறது. வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் கூட இது பிரதிபலிக்கும். ஸ்டாலின் கூறுவது போல வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தல் பாஜகவை தூக்கி எறியக்கூடிய தேர்தலாக அமையும். நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதி கொடுத்துள்ளனர். இரண்டு தொகுதி கொடுத்தால் நன்றாக இருக்கும். கூட்டணி எடுக்கும் முடிவு நன்றாக இருக்கும். நீண்ட காலம் சிறையில் வாடும் சிறைவாசிகள் சிறிது சிறிதாக விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். அவர்கள் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கின்றனர் என்று தெரிவித்தார்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்