ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஸ்ரீ லலிதாம்பிகை ஆலயத்தில் அம்பாளுக்கு வளையல் காப்பு அலங்காரம்!

0

திருச்சி மாவட்டம் சீராத்தோப்பில் அமைந்துள்ள ஸ்ரீ லலிதாம்பிகை ஆலயத்தில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு
அம்மனுக்கு திரவியப்பொடி, கஸ்தூரி மஞ்சள் பொடி, அரிசிமாவு, பால், தயிர், தேன், இளநீர், எலும்மிச்சை சாறு, பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அம்மனுக்கு பட்டு வஸ்திரங்கள், மற்றும் ஆபரணங்கள் சாற்றப்பட்டு வண்ண மலர்கள் மற்றும் வளையல்களைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அம்மனுக்கு வேத மந்திரங்கள் முழங்க ஷோடச தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் அப்பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு அம்மன் அருளை பெற்றனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

- Advertisement -

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்