அதிமுக பொதுக்குழு நாளை கூடுகிறது-பரபரப்பாக மாறும் அரசியல்

அதிமுக பொதுக்குழு நாளை கூடுகிறது-பரபரப்பா மாறும் அரசியல்

 அதி​முக பொதுக்​குழு கூட்​டம் பழனிசாமி தலை​மை​யில் சென்​னை​யில் நாளை நடை​பெற உள்​ளது. இதில் கூட்​ட​ணி, கட்சி ஒருங்​கிணைப்பு உள்​ளிட்ட முக்​கியதீர்​மானங்​கள் நிறைவேற்​றப்​படும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

Bismi

தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே இருக்கும் பரபரப்பான சூழ்நிலையில், அதி​முக பொதுக்​குழு கூட்​டம் பழனிசாமி தலை​மை​யில் சென்​னை​யில் நாளை நடை​பெற

உள்​ளது.

தமிழக சட்​டப்​பேர​வை தேர்தல் நெருங்கும் நிலையில் சென்னை வானகரத்​தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்​டபத்தில் அதி​முக பொதுக்​குழு மற்​றும் செயற்​குழுகூட்​டம் நாளை (டிசம்பர் 10) நடை​பெறுகிறது. கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் 3 ஆயிரம் பேர் உள்பட மாநில நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள் என மொத்தம் 5 ஆயிரம் பேர் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.இதில், சட்​டப்​பேர​வைத் தேர்​தல் குறித்​தும், திமுக அரசுக்கு எதி​ராக பிரச்​சா​ரங்​களை முன்​னெடுப்​பது குறித்​தும் பல அறி​விப்​பு​கள் வெளி​யிடப்பட உள்​ளன.இதுதொடர்​பாக முக்​கிய தீர்​மானங்​களும் நிறைவேற்​றப்பட இருக்​கின்​றன. அதே​போல், அதி​முக ஒருங்​கிணைப்பு குறித்து முக்​கிய முடிவு​கள் எடுக்க இருப்​ப​தாக​வும் கூறப்​படு​கிறது. அதேநேரம் அதி​முக ஒருங்​கிணைப்பு குறித்து முடிவு எடுக்​கப்​ப​டா​விட்​டால், வரும் 15-ம் தேதிக்​குப் பிறகு ஓபிஎஸ், தனது அரசி​யல் பயணம் குறித்து முக்​கிய முடிவை அறி​விப்​பார்​ என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்