திருச்சி ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த மாடுபிடி வீரர்க்கு கார் பரிசு, வேடிக்கை பார்க்க வந்த சிறுவனை காளை முட்டியதில் உயிரிழந்தார்
திருச்சி ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த மாடுபிடி வீரர்க்கு கார் பரிசு, வேடிக்கை பார்க்க வந்த சிறுவனை காளை முட்டியதில் உயிரிழந்தார்

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, திருச்சி காஜாமலை பகுதியில் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது

திருச்சி மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து 750காளைகளும், 500க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்று ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது

போட்டியில் வெற்றி பெறும் மாடுபிடி வீரர்கள் மற்றும் மாட்டின் உரிமையாளர்களுக்கு அவ்வப்போது சைக்கிள் தங்கக் காசு ரொக்க பணம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன

போட்டியின் முடிவில் சிறந்த மாடுபிடி வீரர்க்கு கார் ஒன்றும், சிறந்த ஜல்லிக்கட்டு காளைகளுக்கு உழவு டிராக்டர் பரிசாக வழங்கப்படது, மற்றும் இரண்டாம் பரிசு மூன்றாம் பரிசு என இருசக்கர வாகனம் தங்க மோதிரம் உள்ளிட்டவர்கள் பரிசாக வழங்கப்பட்டது
இந்த ஜல்லிக்கட்டு போட்டியின் போது மார்ட்டின் உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 59 பேர் காயமடைந்தனர்
ஜல்லிக்கட்டு போட்டியின் போது,போட்டியை வேடிக்கை பார்க்க வந்த பிரதீப் வயது (16 ) என்ற இளைஞர் மீது திடீரென காளை முட்டியதில் பிரதீப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில்.. பிரதீப் வயது -( 16 ),S/o இளையராஜா
அழகாபுரி, தோகமலை
கரூர் மாவட்டம் சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது.





Comments are closed.