நெல்லையில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே சவுந்தரலிங்கபுரத்தில், விஜயன் என்பவரது வீட்டில் நள்ளிரவில் மர்மநபர்கள் 2 பேர் பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு தப்பி ஓடினர். இதையடுத்து, அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

- Advertisement -

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பெட்ரோல் குண்டுகளை வீசிய மர்மநபர்களை தேடி வருகின்றனர். முன் விரோதம் காரணமாக, பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது என்பது விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து போலீசார் பல்வேறு கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்