மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்ப பெறக்கோரி இ.கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மூன்று குற்றவியல் சட்டத்தை வாபஸ் பெற கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் இன்று திருச்சி உறையூர் குறத்தெரு பகுதியில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு பகுதி குழு செயலாளர் இரா.சுரேஷ் முத்துச்சாமி தலைமை வகித்தார். ஏஐடியூசி மாவட்ட பொதுச் செயலாளர் க. சுரேஷ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் ம.செல்வராஜ் ஆகியோர் விளக்க உரையாற்றினர். தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

- Advertisement -

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்