ஸ்ரீபுரம் பொற்கோயிலுக்கு ஜனாதிபதி திரவுபதி சுவாமி தரிசனம்.
ஸ்ரீபுரம் பொற்கோயிலுக்கு ஜனாதிபதி திரவுபதி சுவாமி தரிசனம்.
வேலுார் மாவட்டம்,அரியூர் அடுத்த ஸ்ரீபுரத்தில், ஸ்ரீபுரம் நாராயணி பொற்கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சுவாமி தரிசனம் செய்வதற்காக வருகை புரிந்தார் .

குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இன்று (டிசம்பர் 17) தேதி ஆன்மீக பயணமாக வேலூர் மாவட்டம், ஸ்ரீபுரத்தில் உள்ள புகழ்பெற்ற பொற்கோயிலுக்கு வருகை தந்தார் . இதனையொட்டி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது . இன்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்படும் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா விமான நிலையம் வந்து அடைகிறார். பின்னர் இந்திய விமானப்படைக்கு சொந்தமான MI-17 ஹெலிகாப்டர் மூலம் வேலூர் ஸ்ரீபுரம் ஹெலிபேடிற்கு காலை வருகை தந்தார் .ஹெலிபேடில் தரையிறங்கியதும், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி, காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் உள்ளிட்டோர் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவுக்கு வரவேற்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து ஸ்ரீபுரம் ஹெலிபேடில் இருந்து சாலை மார்க்கமாக கமலா நிவாஸ் விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார்.பின்னர் அங்கிருந்து பொற்கோயிலில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்கிறார். காலையில் ஸ்ரீ நாராயணி அம்மன், 1,800 கிலோ வெள்ளியால் அமைக்கப்பட்ட விநாயகர், சொர்ணலட்சுமி, பெருமாள் ஆகிய கோவில்களில் ஜனாதிபதி சுவாமி தரிசனம் செய்தார். தியான மண்டப திறப்பு விழா மற்றும் மரம் நடுதல் நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார்.
நிகழ்ச்சிகள் நிறைவடைந்த பின்னர், பிற்பகல் கமலா நிவாஸ் விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்பட்டு ஹெலிகாப்டர் மூலம் மீண்டும் திருப்பதி
செல்கிறார்.குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வருகையையொட்டி ஸ்ரீபுரம் பொற்கோயில் வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் “Red Zone” என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு காரணங்களால் 17.12.2025 இன்று மத்திய அரசு பணிகள், மாநகராட்சி/நகராட்சி சார்பாக பணிகள், தனியார் நிறுவனப் பணிகள் அல்லது எந்த வகையான விழாக்களுக்காகவும் டிரோன் (Drone)பயன்பாட்டிற்கு மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார்.


Comments are closed.