திருச்சியில் நேர்மை தவறாமல் பணியாற்றும் சிறப்பு காவல் அதிகாரிக்கு சமூக ஆர்வலர் ஜான் ராஜ்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சமூக ஆர்வலர் பா.ஜான் ராஜ்குமார் இதுகுறித்து கூறுகையில் திருச்சி மாநகர காவல் துறையில் 2ம் எண் நெடுஞ்சாலை ரோந்து பணி வாகனத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் கந்தசாமி இவர் திருச்சி பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள எஸ்பிஐ ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்றுள்ளார் அப்போது அங்கே பக்கத்தில் இருந்த ஏடிஎம் மிஷினில் ரூ.13,000 மதிக்கத்தக்க செல்போன் இருந்து இருக்கிறது அதை அவர் எடுத்து பத்திரமாக வைத்திருந்தார்.
செல்போனின் உரிமையாளரான திருச்சி மாவட்டம் நாக மங்கலத்தைச் சேர்ந்த பாலச்சந்தர் என்பவர் காவல்துறை அதிகாரியிடம் தொடர்பு கொண்டு பேசியபோது காலை வந்து பெற்றுக் கொள்ளும்படி சொல்லி இருக்கிறார். அதன்படி அவர் காலையில் வந்து தனது செல்போனுடைய அடையாளங்கள், அந்த செல்போன் உடைய விவரங்களைச் சொல்லி, உரிய ஆவணங்களை காட்டி உடனடியாக அவர் அந்த செல்போனை பெற்றுச் சென்றுள்ளார்.
அதேபோல திருச்சி மாநகர காவல் துறையில் உண்மையாக, நேர்மையாக, குற்றங்கள் தடுப்பதிலும், திருட்டு வாகனங்கள் நம்பர் பிளேட் மாற்றி ஓட்டும் வாகனங்கள் போன்ற குற்றச்செயல்களை தடுத்துள்ளார்.
தனது திறமையால், மெச்சத் தகுந்த பணிகளை தொடர்ந்து செய்து வர கூடிய நேர்மையான காவல் அதிகாரி கந்தசாமியின் சேவையை திருச்சி சமூக ஆர்வலரும், சட்டத் தன்னார்வலர் என்ற முறையிலும் பாராட்டுகிறேன்.
உயர் அதிகாரிகள் அவரை நேரில் அழைத்து பாராட்ட வேண்டும். அவருடைய நேர்மை, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு காத்துவரும் நேர்மை தவறாத காவல் அதிகாரியான கந்தசாமிக்கு அவர்களுக்கு எனது வாழ்த்துகளும் பாராட்டுகளும் தெரிவித்துக் கொள்கிறேன்
என்று ஜான் ராஜ் குமார் கூறினார்
