திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆனைமலைஸ் டொயோட்டோ ஷோரூம் இல், டொயோட்டா நிறுவனத்தின் புதிய தயாரிப்பான அர்பன் க்ரூஸர் “ஹைரைடர்” ஹைபிரிட் கார் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது, சிறப்பு அழைப்பாளராக திருச்சி மாநகர காவல் துறை ஸ்ரீரங்கம் சரக உதவி ஆணையர் நிவேதா லட்சுமி கலந்து கொண்டு புதிய காரை அறிமுகம் செய்து வைத்தார். இந்நிகழ்வை தொடர்ந்து புதிய காரை வாங்கிய முதல் வாடிக்கையாளருக்கு கார் சாவியை வழங்கினார்.

நிகழ்ச்சியில் நிறுவனத்தின் சி.இ.ஒ வெங்கடேசன், கிளை மேலாளர் ஆன்டனி ராஜ் மற்றும் நிர்வாக ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் என ஏராளமான கலந்து கொண்டு சிறப்பித்தனர்.