சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ரூ.5.80 லட்சம் மதிப்பில் முதலுதவி மருத்துவ மையம் திறப்பு விழா. அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.

0

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ. 5.80 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட முதலுதவி மருத்துவ சிகிச்சை மைய திறப்பு விழா இன்று நடைபெற்றது. நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு, எம்எல்ஏ கதிரவன் ஆகியோர் குத்து விளக்கேற்றி  திறந்து வைத்தார்.அம்மன் தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோயில். இக்கோயிலுக்கு திருச்சி மாவட்டம் மட்டுமில்லாமல் தமிழகம் மற்றும் பிற மாநிலங்கலிருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு நேர்த்திக் கடன்செலுத்துகின்றனர்.    இந்நிலையில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காகவும் அவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிப்பதற்காக மாரியம்மன் கோயில் ராஜகோபுரம் முன்பு கோயில் நிர்வாகத்தின் சார்பில் ரூபாய் 5.80 லட்சம் மதிப்பில் முதலுதவி மருத்துவ சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது இந்நிலையில் தமிழக முதல்வர் சட்டமன்ற அறிவிப்பின்படி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் முதலுதவி மருத்துவ சிகிச்சை மையத்தை அமைச்சர் கே என் நேரு திறந்து  வைத்தார்.

- Advertisement -

இந்த சிகிச்சை மையத்தில் இரண்டு டாக்டர்கள்,2 நர்சுகள், மற்றும் 2  பன்முக பணியாளர்கள்  என மொத்தம் 6 பேர் பணியில் உள்ளனர்.இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சிவராசு, மண்ணச்சநல்லூர்  எம்எல்ஏ கதிரவன், திருச்சி மண்டல இணை ஆணையர் செல்வராஜ், சமயபுரம் கோவில் இணை ஆணையர் கல்யாணி, கோயில் அலுவலக பணியாளர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


 

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்