திருச்சி காவேரி மருத்துவமனையில் இரண்டு முதியவர்களுக்கு ட்ரான்ஸ் கதீட்டர் பெருந்தமணி வால்வு அதிநவீன சிகிச்சை முறையை யன்படுத்தி அறுவை சிகிச்சை இல்லாமல் பெருந்தமணி வால்வு மாற்று சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் 60 வயது முதல் 70 வயதை கடந்த முதியவர்கள், அதில் ஒருவருக்கு சுவாசிப்பதில் சிரம பிரச்சனை மற்றும் இதய செயல்பாடுகள் தொடர்பான பாதிப்புகளும் இருந்தன, ஏற்கனவே ரத்த நாளங்களில் இருந்த அடைப்பு களுக்காக பைபாஸ் அறுவது சிகிச்சை செய்யப்பட்டிருந்தது, சமீபத்தில் இவருக்கு சுவாசிப்பதில் சிரம பிரச்சனை உருவானதால் அவரால் நேராக படுக்க இயலவில்லை, உருகி இருக்கும் இதயசுவர் மற்றும் பெருந்த மணி வாழ்வில் கசிவு என இரு பிரச்சனைகளும் அவருக்கு இருப்பது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. ஏற்கனவே திறந்த நிலையில் அறுவை சிகிச்சை செய்ததால் மீண்டும் திறந்த நிலை அறுவை சிகிச்சை செய்வது உயிருக்கு ஆபத்தானதாக இருக்கலாம் என்று அவருக்கு ரத்த பரிசோதனைக்கு தீர்வு காண பலூன் மூலம் விரிவாக்கக்கூடிய TAVI வாழ்வை காவேரி மருத்துவமனையில் சிறப்பு இருதவியல் நிபுணரான டாக்டர் சுராஜ் நரசிம்மன் தலைமையிலான மருத்துவ குழு வெற்றிகரமாக பொருத்தியது.

மற்றொரு நபருக்கு தீவிர சுவாச பிரச்சனை இருந்ததால் அவரால் 100 மீட்டர்கள் தூரம் வரை கூட நடக்க இயலவில்லை, பெருந்தமணி வாழ்வில் கால்சியம் படிமங்கள் சேர்ந்து இருப்பதன் காரணமாக நிகழ்கின்ற, கடுமையான பெருந்தமணி குழாய் சுருக்கம் என அழைக்கப்படும் பாதிப்பு இருப்பது அவருக்கு உறுதி செய்யப்பட்ட நிலையில், பெருந்தமணி வாழ்வு திறப்பது பாதிக்கப்படும் இதனால் உடலில் பிற பகுதிகளுக்கு குறைவான இரத்தமே செல்லும், இந்த பாதிப்பு நிலையின் காரணமாக அவரது இதயத்தின் பம்பிங் செயல்பாடு 15 சதவீதமாக குறைந்து இருந்தது, அத்துடன் அவரது சிறுநீரக செயல் திறனும் குறைந்து இருந்தது, திறந்த நிலை இதய அறுவை சிகிச்சை செய்யப்படுமானால் உயிர் இழப்பிற்கு அதிக இட வாய்ப்பு அவருக்கு இருக்கும் என மதிப்பிடப்பட்டது. எனவே மருத்துவர்களின் விரிவான கலந்த ஆலோசனைக்கு பிறகு அதிநவீன சிகிச்சை செயல்முறைப்படி காலில் மிகச் சிறிய தொலையை ஏற்படுத்தி, அதன் வழியாக சுய விரிவாக்கம் செய்து கொள்ளக்கூடிய TAVI வாழ்வை மருத்துவர்கள் குழு அவருக்கும் வெற்றிகரமாக பொருத்தியது. இச்செயல் முறை நிறைவடைந்ததிலிருந்து 6 மணி நேரங்களுக்கு பிறகு இந்த நோயாளியால் எழுந்து நடமாட முடியும், வழக்கமான செயல்பாடுகளை செய்வதற்கான திறனை பெற்றிருக்கும் நிலையில் 48 மணி நேரங்களுக்கு பிறகு மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு சென்று இயல்பான செயல்பாடுகளை இவர்களால் செய்ய முடியும், திறந்த நிலை அறுவை சிகிச்சைகளில் அதிகமான இடர் வாய்ப்பைக் கொண்டிருந்த இந்த முதியவர்களின் உயிரை காப்பாற்றுவதற்கு மிக துல்லியமான நோயாளிகளையும் மற்றும் சரியான சிகிச்சை முறையை அடையாளம் கண்டு வெற்றிகரமாக இதனை நிகழ்த்தி இருக்கும் இடையீட்டு இதயவியல் சிகிச்சை நிபுணரான டாக்டர் சுராஜ் நரசிம்மன் மற்றும் அவரது குழுவினரை நாங்கள் பாராட்டி மகிழ்கின்றோம், என காவேரி மருத்துவமனையில் செயல் இயக்குனர் மற்றும் இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் செந்தில்குமார் கூறினார்.