வருவாய்த்துறையினர் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி மற்றும் தர்ணா போராட்டம்!

வருவாய்த்துறையினர் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி மற்றும் தர்ணா போராட்டம்!

வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன்.25 அன்று தமிழகம் முழுவதும் ஒரு நாள் விடுப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருச்சி கண்டோன்மெண்ட் வெஸ்ட்ரி பள்ளி ரவுண்டானாவில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பேரணி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டமும் நடைபெற்றது.

- Advertisement -

இதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, நில அளவை துறையில் பணிபுரிந்து வரும் அலுவலர்களுக்கு உரிய பணி பாதுகாப்பு வழங்க வேண்டும், வருவாய்த்துறை அலுவலர்கள் மீது தாக்குதல் நடைபெறும் பட்சத்தில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் உள்ள அனைத்து நிலையான காலிப் பணியிடங்களையும் விரைந்து நிரப்ப வேண்டும், ஒவ்வொரு வருடமும் ஜூலை 1ஆம் தேதி வருவாய் துறை தினமாக அனுசரித்து அரசாணை வெளியிட வேண்டும், உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 200க்கும் மேற்பட்ட வருவாய் துறை அலுவலர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

பேரணிக்கு பிறகு வருவாய்துறை சங்கங்களின் கூட்டமைப்பு திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில்,…

வருவாய்த் துறையின் அங்கீகரிக்கப்பட்ட கூட்டமைப்பு சங்கங்களின் சார்பாக இன்று தமிழ்நாடு முழுவதும், 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி மற்றும் தர்ணா நடைபெற்று வருகிறது. இந்த கோரிக்கைகள் குறித்து அமைச்சர் மற்றும் அரசிடம் அமர்ந்து பேசியும் எந்த நடவடிக்கையும் இல்லை. அடுத்த கட்ட போராட்டம் குறித்து மாநில நிர்வாகிகள் அறிவிப்பார்கள் என தெரிவித்தார்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்