- Advertisement -

திருச்சியில் SIR – படிவம் தொடர்பாக 2 நாள் சிறப்பு முகாம்…

- Advertisement -

திருச்சியில் SIR – படிவம் தொடர்பாக 2 நாள் சிறப்பு முகாம்…

Bismi

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் அடிப்படையில் தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் பணி கடந்த மாதம் 4 ஆம் தேதி தொடங்கி இம்மாதம் 14 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கடந்த 19ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் திருச்சி மாவட்டத்தில் இருக்கக்கூடிய 9 சட்டமன்ற தொகுதிகளில் 3,31,787 நபர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் பெயர் நீக்கப்பட்டவர்கள், SIR படிவத்தை திரும்பி தராதவர்கள், புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விருப்பம் உள்ளவர்கள் என அனைவருக்கும் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் அடிப்படையில் சிறப்பு முகாம் அறிவிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 2,785 வாக்குச்சாவடி மையங்களிலும் இன்றும் , நாளையும் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான மக்கள் SIR படிவம் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் புதிதாக விண்ணப்பிப்பவர்கள் என அனைவரும் தங்களுடைய படிவத்தை வழங்கி வருகிறார்கள்.இந்த சிறப்பு முகாமை பொதுமக்கள் தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர், சரவணன் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்