திருச்சி ஸம்ஸபிரன் தெரு, பெரிய கடைவீதியில் ஸ்ரீ பைரவா பார்மஸி திறப்பு விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர், திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் மதிவாணன், கவுன்சிலர் சாதிக் பாட்சா, சுருளி ராஜன் மற்றும் பார்மஸி உரிமையாளர்கள் பாலமுருகன், ராகவ் ஆகியோர் உடன் இருந்தனர். மேலும் நிகழ்ச்சியில் திமுக கட்சியின் கழக முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் என பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.