திருச்சி முன்னாள் எம்பி அடைக்கலராஜ் 86வது பிறந்தநாள் முன்னிட்டு ஜோசப் லூயிஸ் தலைமையில் நிர்வாகிகள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

0

- Advertisement -

திருச்சி முன்னாள் எம்பியும்,  மாநில காங்கிரஸ் துணைத் தலைவருமான எல்.அடைக்கலராஜுக்கு இன்று 86வது பிறந்தநாள். இதையொட்டி திருச்சி ஜென்னி பிளாசாவில் உள்ள அவரது உருவச்சிலைக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும், தொழிலதிபருமான ஜோசப் லூயிஸ் அடைக்கலராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில்தொழிலதிபர்கள் ஜோசப் பிரான்சிஸ்,வின்சென்ட் அடைக்கலராஜ்,திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜவகர், முன்னாள் மேயர் சுஜாதா,மாவட்ட பொருளாளர் ராஜா நசீர்,மாவட்ட பொதுச் செயலாளர்கள் சிவா, ராஜா டேனியல் ராய், பிலால், மேலப்புதூர் சத்தியநாதன், கவுன்சிலர் ரெக்ஸ்,நிர்வாகிகள்அல்லூர் சுரேஷ், ராஜேஷ், சிக்கல் சண்முகம், திருவரங்கம் சேட்டு, சிவாஜி சண்முகம் தென்னூர் மெய்யநாதன்,கள்ளிக்குடி சுந்தரம்,என்ஜினியர் காளீஸ்வரன், தென்னூர் ஜெகதீஸ்வரன் அழகர் ஜாகீர் உசேன்,ஜீவா நகர் மனோகரன் அண்ணா சிலை விக்டர் ராஜா,வரகனேரி வைரவேல்,பட்டேல்,பிரியங்கா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் தொடர்ந்து மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜவகர் தலைமையில் திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்